நிறைய பேசுவோம்

Saturday, February 19, 2011

தங்கம் ஜொலிக்குது மனசு வலிக்குது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நான் அன்று மதுரையில் பிரபலமாக உள்ள நகைக்கடைக்கு தங்க நகை வாங்க சென்றேன் .சிறியதாக ஒரு தோடு மட்டுமே எடுத்தேன் விலையை கேட்டவுடன் ஆடிப்போய்விட்டேன் காரணம் அன்றைய சந்தை விலையை விட கே.டி.எம் காக பத்து சதம் அதிகம் சரி இது வாடிக்கை என்று சமாதானம் செய்து கொண்டேன் அடுத்து அந்த விற்பனை பிரதிநிதி கூறியதுதான்
சங்கடத்தில் ஆழ்த்தியது சேதாரம் மற்றும் நகை வடிவைமப்புக்காக   பதினெட்டு சதம் விலை உயர்வாம் .

     அப்போது நான் கேட்டேன் அவரிடம் இதை விற்கும்போது மொத்தமாக  28 % நட்டம் அப்படிதானே என்றேன் 

"ஏன்....?" என்று ஆச்சர்யமாக பார்த்தார் 

நான் சொன்னேன் எப்படியும் மாற்றத்தானே செய்வோம் அப்போது நீங்கள் வடிவமைப்பு சேதாரம் எல்லாம் எங்களுக்கு தரமாட்டிர்கள்தானே என்றேன் .
சிரித்தார் 

பாருங்கள் கே.டி.எம் யை விட 18 % விலை அதிகம் மேலும் சென்னையில் விற்பதை விட மதுரையில் அன்றைய சென்னை சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு விற்கின்றனர் .

இதை எல்லாம்  கேட்பவர் யாருமில்லையா  சிந்தியுங்கள் என் மனதில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து  கொண்ட திருப்தியுடன் விடை பெறுகிறேன் 

கவிதை கதைகளோடு இந்த மாதிரியான எண்ணங்களையும்  உங்களோடு பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்



No comments: