நிறைய பேசுவோம்

Friday, January 17, 2014

நயன்தாராவின் முதல் காதல் ..

நயன்தாரா பொங்கல் நிகழ்ச்சியில் ஒரு டி .வி க்கு அளித்த பேட்டியில் தான் மூன்றாவது படிக்கும் போது ஆறாவது படிக்கும் பையன் தினம் ஒரு லவ் லெட்டெர் ரோஸ் வைத்து கொடுப்பானாம் இதை பால்ய காதல் அனுபவம் போல் பெருமையாக கூறினார் .
 அப்போதே இவர் பின்னால் அலைய  ஆரம்பித்து விட்டனர்

இதை பார்க்கும் மூன்றாவது படிக்கும் பெண்களும் ஆறாவது படிக்கும் பயனும் பாவம் பெற்றோர்களும் பாவம் என்ன சொல்வது


சிவகார்த்திகேயன்-உப்புமா

நடிகர் சிவா கார்த்திகேயனை வைத்து விஜய் டிவியில் பொங்கலுக்கு எங்க வீட் டு பிள்ளை என்று ஒரு நிகழ்ச்சி நடத் தினர் அதில் ஒரு பெண் இவர் கன்னத்தை கிள்ளவேண்டும் என்று கிள்ளுகிறார் பதிலுக்கு அந்த பெண்ணின் கன்னத்தை கிள்ளவேண்டும் என்கிறார் .உப்புமா ஊட்டி விட சொல்கிறார் இப்படி செய்பவர்கள் ஒரு நடிகையை சிவகார்திகெயன் இடத்தில உட்கார வைத்து ஆண்கள் அந்த நடிகையின் கன்னத்தை கிள்ளுவது போலவும் இந்த உப்புமா ஊட்டி விடுவது போன்ற செயல் களையும் செய்ய வைப்பார்களா மாட்டார்கள் . காரணம் விமர்சனம் நிறையவரும்  .ஒரு நடிகனின் கன்னத்தை கிள்ளவும் உப்புமா ஊட்டிவிடவும் பெண்களா.. ஏன் பெண்களை இப்படி காட்டுகிறார்கள் இது சிவகார்த்திகேயன்க்கும்  நல்லதல்ல .

வளர்த்து விட்ட விஜய் டிவியே அவர் இமேஜை காலி செய்துவிடுவார்களோ ..
மொத்தத்தில் இது போன்ற நிகழ்சிகள் வருவது ஆபத்தானது