நிறைய பேசுவோம்

Saturday, April 23, 2011

சத்ய சாய் பாபா மரணம் - பிரபாஷ்கரன்


சத்ய சாய் பாபா மரணம் 

பாபா ..
எப்படி .
ஏற்று  கொள்வதென்று 
தெரியவில்லை 
ஆனால்..
ஏற்று  கொள்ளத்தான் 
வேண்டும் ..
வருத்தங்களை 
சொல்ல 
வார்த்தை இல்லை 
வணங்குகிறோம் 
பாபா 
நீ  ..
ஒரு அற்புதம்

பெற்றோர்களுக்கோ கவலை ஆரம்பமாகி விட்டது -பிரபாஷ்கரன்


கோடை விடுமுறை விட்டாச்சு குழந்தைகளுக்கு ஜாலி ஆனால் பெற்றோர்களுக்கோ கவலை ஆரம்பமாகிவிடும் ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் யூனிபோர்ம் வாங்க வேண்டும் என்று ஆயிரம் கவலைகள் சமத்துவ கல்வி வருகிறதாம் சமத்துவ கல்வி கட்டணம் வருமா தெரியவில்லை . அரசு பள்ளிகளில் தரம் இல்லையே என்று தனியார் பள்ளிகள் சென்றால் அங்கு கல்வி கட்டணம் அதிகமாக உள்ளது . ஒரு விஷயம் பார்த்தீர்களானால் அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் தரம் (சம்பளம் ) வானளவு உயர்துள்ளது ஆனால் மாணவர்களின் தரம் தான் உயரவில்லை ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் தரம் (அதிக கட்டணம் கட்டினால்) உயர்துள்ளது ஆனால் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களின் தரம் உயரவில்லை . ஏன் இந்த பாகுபாடு இரு இடங்களில் வேலை பார்பவர்களுக்கும் ஒரே கல்வி தகுதிதான் ஆனால் சம்பளத்தில் எத்துனை வேறுபாடு .

கொண்டு வாருங்கள் சமத்துவ கல்வி ,சமத்துவ கல்வி கட்டணம் அதோடு ஆசிரியர்களுக்கு சமத்துவ ஊதியம் .

இதை யார் செய்வது அதற்கும் ஒரு கமிசன் வைக்க வேண்டுமா .கமிசன் வைத்தால்தான் கமிசன் கிடைக்குமா தெரியவில்லை 



கவிதை : கின்னஸ் சாதனை - பிரபாஷ்கரன்


கின்னஸ் புத்தகத்தில் 
எப்படி வந்தது 
என் பெயர் 
சாலையோரத்தில் 
தொடர்ந்து ..
பல மணி 
நேரம் நின்றதாலா..
அன்பே ..
நீ அறிவாயா 
உன் ..
பார்வை 
தரிசனதிற்குதான் 
என்று ..


கவிதை சாய் ராம் ..சாய் ராம் ..பிரபாஷ்கரன்


சுப்ரமணியம் சுப்பிரமணியம் 
சண்முகநாதா சுப்பிரமணியம் 
பாபா ..
இந்த பாடல் 
நான் ..
கைபிடித்து 
நடை பயின்ற 
போது 
என்னை 
வளர்த்த 
என் அப்பாயி
எனக்கு கற்று 
கொடுத்த பக்தி 
இறை பக்தியை 
வாரந்தோறும் 
சாய் பஜன் 
மூலம்தான் 
கற்று கொண்டேன் 
உங்களுக்கா ..
உடல்நிலை 
சரியில்லை ..
இல்லை பாபா 
நீங்கள் ..
உடல் நலம் 
பெற வேண்டும் 
என்று ..
உங்களிடம்தானே 
கேட்போம் 
யாரிடம் 
கேட்க போகிறோம் 
எழுந்து வாருங்கள் 
சாய் ராம் ..


சிறுகதை : காதலிக்கலாமா - பிரபாஷ்கரன்


Kindly Install Baamini font and read


 fhjypf;fyhkh.?
-- gpugh\;.fud;

mts; fha;j;hp thrypy; Nfhykpl;Lf;nfhz;bUf;Fk; Ntisapy; vjph; tPl;L thrypy; ,Ue;J mtd; mtisNa ghh;j;J nfhz;bUe;jhd;.
Mdhy; fha;j;hpNah mtid yl;rpak; nra;atpy;iy.
fha;j;hp fhNy[;fF Gwg;gl;lts;.
mk;kh Ngha;l;L tNud;. Fuy; nfhLj;jts.; thrYf;F te;jhs;.
mg;NghJk; mtd; mtis g];];lhz;l; tiu njhlh;e;jhd;.
mtd; mNrhf; fha;j;hpapd; vjph; tPl;by; FbapUg;gtd; fha;j;hpia ghh;j;j Kjy; mts; kPJ fhjy; . ,Jtiu xUjiy fhjy;jhd;.
fha;j;hpNah fhjYf;F mg;ahw;gl;lts; je;ijapd; fl;Lg;ghl;by; tsh;gts;. fhNy[; tpl;lhy; tPL vd;W xU rpd;d tl;lj;jpw;Fs;Ns ,Ug;gts;.
mNrhf; md;W NfhapYf;F NghFk;NghJk; njhlh;e;jhd;.
"Nr . vd;d ngz; ,ts; VnwLj;Jk; ghh;f;fhky; ek; fhjiy vg;gb mtsplk; njhptpg;gJ Ngrhky;; Nehpilahf nrhy;yp tplyhkh Ntz;lhk;  Kfj;jpy; moj;jhw; Nghy; gjpy; nrhy;yp tpl;lhy; Ngrhky; nyl;lh; vKjp nfhLj;J tpl;lhy; fnuf;l; mJjhd; rhpahd to vOj Mjk;gpj;jhd;..
fha;j;hp tPl;by; cl;fhh;e;J fijg;Gj;jfk; gbj;Jf; nfhz;bUe;jhs;.
mg;NghJ mq;Nf te;j mtspd; je;ij mts; vd;d gbf;fpws; vd;W Gj;jfj;ij thq;fp ghh;j;j mth; fj;j Muk;gpj;jhh;.
    " Vz;b ghl Gj;jfk; gbf;fpw tarpy fij Gj;jfk;kh gbf;fpNw fz;l Gj;jfj;ijak; gBr;R nfl;L NghwJ mJy fhjy; fj;jphpf;fha;d;D vOJthq;f fj;jpf; nfhz;Nl Nghdhh;..
    jhd; vd;d jg;G nra;Njhk; Ghpahky; epd;whs;. fha;j;hp
    kWehs; fhiyapy; thry; njspj;J nfhz;bUe;jhs; fha;j;hp mg;NghJ mts; mUNf te;j mNrhf; me;j nyl;liu mtsplk; je;J tpl;L jpUk;gp ghh;f;fhky; nrd;W tpl;lhd;..
    gphpj;Jg; ghh;j;jhs;
    mg;NghJ xU if me;j nyl;liu thq;fpaJ.
    jpUk;gp ghh;f;f mtspd; je;ij epd;W nfhz;bUe;jhh;
    nyl;liu gbj;jhh;.
    "Vz;b gbf;fpw tarpy; cdf;F fhjyh Nfl;FJ fhjyhkpy;y fhjy; "
ngy;l;il cUtpdhh;.
     Ngr re;jh;g;gk; juhky; mtis rukhhpahf mbf;f Muk;gpj;jhh; if XAk; tiu mbj;J Kbj;jth; me;j nyl;liu mts; Nky; tPrpnawpe;J tpl;L nrd;W tpl;lhh;.
    ehd; vd;d jg;G nra;Njhk; Ghpahky; mOJ nfhz;bUe;jts; me;j nyl;liu vOj;J gbf;f Muk;gpj;jhs;
    md;Ng fha;j;hp ehd; cd;id fhjypf;fpNwd; cd; md;Gf;fhf
 jpdk; jpdk; Vq;Fk;--- ------mNrhf;



     

Friday, April 22, 2011

பூ மழை தூவுது வானம் உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

ஒரு காலத்தில் திரை படங்களில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை அப்போது கிறுக்கியது இது .  நான் அதற்கான முயற்சி செய்ய வில்லை இருந்த போதும் அதை இங்கு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி .. இதில் குறைகள் இருந்தால் மன்னிக்கவும் 


பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

உன் விழி பார்வையை தேடி ..
அலை பாயுது எந்தன் நெஞ்சம் ..

உன் விழிகள் பார்க்கும் பார்வையில் 
சொக்கி கிடக்குது மனசு இந்த மனசு ..

பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

மௌனங்கள் பேசும் ஆயிரம் மொழிகள் 
நீ பேசும் மௌன மொழியோ எனக்கு  காதல் மொழி 

உன்னை பார்த்திட துடிக்குது எந்தன் கண்கள் ..
கனவுகள் கண்களுக்கு தெரிவதில்லை ..

மனதில் ஆயிரம் கனவுகள் பிறக்கின்றன ..
பட்டம் பூச்சி இதயத்தில் பறக்க ஆரம்பிக்கிறது 

இதயம் என்னிடம் இல்லை .. உன்னிடம் ஓடி வருகிறது 
பார்த்து கொள் பத்திரமாய் ..

பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

உன் இடை வெளியில்  நானும் முகம் பார்த்து கொள்கிறேன்
உன் விரல்கள் வாரி விடட்டும் என் தலை முடியை 


Thursday, April 21, 2011

கவிதை :அவளுக்காக மாளிகை .. கட்டுகிறேன் - பிரபாஷ்கரன்


நானும் ..
அவளுக்காக 
மாளிகை ..
கட்டுகிறேன் 
கற்களால் 
அல்ல 
கவிதையால் 



Wednesday, April 20, 2011

கவிதை: காதல் ஜெயிக்குமா.. தெரியாது ஜெயிக்கனும் ..- பிரபாஷ்கரன்



காதலர்கள் தற்கொலை என்ற செய்தியை பேப்பரில் பார்த்தவுடன் இந்த கவிதை தோன்றியது அதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி 

பார்த்தவுடன் 
வருகிறது 
காதல் 
பார்க்காமலும்
வருகிறது 
காதல் .
பேசாமலும் 
வருகிறது 
காதல் .
யாரையும் 
கேட்டு ..
வருவதில்லை 
இந்த 
காதல் 
எல்லாம் 
உங்கள் 
இருவர் மனம் 
பார்த்து ..
வரும் 
இந்த காதல் 
ஜெயிக்குமா..
தெரியாது 
ஜெயிக்கனும் ..
என்ற ..
ஆசை ..
இருக்கிறது ..
ஓட்ட பந்தயத்தில் 
ஓடினால்தான் 
வெற்றி ..
காதலில் 
போராடினால்தான் 
வெற்றி ..
இதை ..
மனதில் கொண்டு 
காதலியுங்கள் ..
மாறாக ..
சாவில் இணைகிறோம் 
என்று ..
வேறு வித 
முடிவுகள் 
வேண்டாம் 
போராடியும் 
காதல் 
ஜெயிக்கவில்லையா ..
விட்டு கொடுங்கள் 
உங்கள் காதலை 
ஜெயித்து போகட்டும் 
காதல் ..
காலத்திற்கும் 
நினைவுகளோடு 
வாழுங்கள் ..
அதுவே ..
காதலுக்கு ..
வெற்றி என்றும் 



Tuesday, April 19, 2011

கவிதை: அவளை தேடுகிறேன்... -பிரபாஷ்கரன்


தொலைந்து ..
போன 
காதல்கள் 
இன்றும் 
தேடப்படுகின்றன 
பேஸ்புக்லும் ..
ஆர்குட்லும் 


Monday, April 18, 2011

கவிதை : நீ ஆயுள் கைதியாய் சிறையில் .. - பிரபாஷ்கரன்


அன்பே ..
உன் ..
புன்னகையால் 
என்னை 
உன் ..
இதய சிறையில் 
அடைத்தாய் 
உன் 
விழிகளால் 
என்னை 
கட்டி போட்டாய் 
உன் ..
இதயம் 
எனும் 
சிறையில் 
ஆயுள் 
கைதியாய்
இருக்க 
ஆசைப்பட்டேன் 
ஆனால்.
என்னை 
விடுவித்து .
விட்டாய் 
காரணம் 
நீ 
ஆயுள் கைதியாய் 
சிறையில் ..
போனதால்தானே 



Sunday, April 17, 2011

மதுரையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி கொலை

மதுரை:மதுரையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சித்திரைசெல்வியை (18), கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். அரிவாள் வெட்டில் காயமுற்ற மாணவியின் தாயார் மற்றும் சகோதரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வில்லாபுரம் சொக்கலிங்கம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (40). இவர், திருப்பூரில் உள்ளார். இவரது மனைவி லதா மங்கேஸ்வரி (39). இவர்களது மகள் கயல்விழி (எ) காயத்திரிதேவி (21). வில்லாபுரம் கணக்குப் பிள்ளை தெருவை சேர்ந்தவர் வக்கீல் முத்துராமலிங்கம் (40). இவர், அப்பகுதியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.முத்துராமலிங்கத்திற்கும், லதாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களுக்கு பிறந்தவர் சித்திரைசெல்வி (18). இவர், இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். இவரது பெயரில் முத்துராமலிங்கம் வீடு ஒன்றை எழுதி கொடுக்க திட்டமிட்டார். இதற்கு நாகஜோதி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.லதா, கயல்விழி, சித்திரைசெல்வி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 


நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மர்ம நபர்கள் மூவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தூங்கிய சித்திரைசெல்வியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். லதா, கயல்விழியை வெட்டி விட்டு தப்பினர். படுகாயமுற்ற லதா, கயல்விழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சித்திரைசெல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கயல்விழி புகார்படி, நாகஜோதி உட்பட மூவரை கீரைத்துறை போலீசார் தேடிவருகின்றனர். கொலை செய்து விட்டு 
தப்பியோடிய போது தெருநாய் ஒன்று, கொலையாளிகளை விரட்டியது. ஆத்திரமடைந்த கொலையாளிகள் நாயை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.


மேலே காணும் செய்தி தினமலரில் வந்தது முதலில் நன்றி தினமலருக்கு 

இந்த செய்தியில் வெட்டப்பட்ட அந்த பெண் என்ன பாவம் செய்தாள் . பெற்றவர்கள்  செய்த தவறுக்கு அந்த பெண் படு கொலை செய்யபட்டுள்ளார்  உறவு முறைகள் தவறாக ஏற்படும்போது இப்படி பட்ட மோசமான சம்பவங்கள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது .ஒரு பெண் கூலிப்படை வைத்து கொலை செய்வதை நினைக்கும் போது நம் சமூகம் எங்கே போய் கொண்டிருகிறது என்ற கவலை நம் முன் வருகிறது . இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம் . வேதனை இதற்கு யாரை குறை சொல்வது இந்த செய்தியை படித்தவுடன் மனம் வேதனை பட்டது எனவே உங்களோடு பகிர்ந்து கொண்டேன் .இது போன்ற நிகழ்வுகளுக்கு தீர்வுதான் என்ன ..?

கவிதை : விழி ஜன்னலை - பிரபாஷ்கரன்




அன்பே ..
நீ ..
உன் விழி 
ஜன்னலை 
அறைந்து 
சாத்தும்போதே 
புரிந்து 
கொண்டேன் 
உன் ..
இதய கதவை 
எனக்காக 
திறந்து ..
வைத்திருக்கிறாய் 
என்று ..