நேற்று சுயநிதி கல்லூரியில் ஆசிரியர்களின் சம்பளம் பற்றி எழுதியிருந்தேன் .அதற்கு நண்பர் சீனா அவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து போர வேண்டும் என்று கருத்து சொல்லியிருந்தார். உண்மை ஆனால் அது அவ் வளவு எளிதல்ல காரணம் பணி பாதுகாப்பு என்பது அவர்களுக்கு முழுமையாக இல்லை . இருந்தாலும் போராடினால்தான் வெற்றி பெற முடியும் .
சரி இன்றைய பதிவிற்கு வருவோம் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் அட்மிசன் காக அழைத்து சென்றார் அங்கு நான் கண்ட காட்சிதான் என்னை ஆச்சர்ய பட வைத்தது . அங்கு ஒவ்வொரு கோர்ஸ்க்கும் நன்கொடை வாங்கி கொண்டிருந்தனர் .அப்போது ஒருவர் காலில் செருப்பு இல்லை கூலி வேலை செய்கிறாராம் தன் மகளுக்கு சீட் கேட்கிறார் நன்கொடை தர தயாராக . கொஞ்சம் கொஞ்சமாக தருகிறேன் என்கிறார் . அதற்கு எதிர்த்தார் போல் இருந்தவர் ஒரு மாதத்திற்குள கொஞ்சம் கொஞ்சம் ஆகா 1 லட்சம் கொடுக்க சொல்கிறார் இவரும் சரி என்கிறார் மனைவியிடம் கேட்டு விட்டு, அங்கு பெரிய வியாபாரமே நடந்தது mechanical கேட்டால் இல்லை automobile எடுத்துக்கங்க கம்ப்யூட்டர் கேட்டால் இல்லை it எடுத்துக்கங்க இப்படி வியாபாரம் நடக்கிறது நன்கொடையுடன் .
இப்படி பணம் கொடுத்து இன்ஜினியரிங் படிக்கணும்மா ஏன் ஆர்ட்ஸ் காலேஜ் இல் ஒரு degreee படித்தால் வேலை கிடைக்காதா கஷ்டபட்டாவது நன்கொடையை அள்ளி கொடுத்து இப்படி படிக்கணுமா ஏன் இந்த மோகம் எத் தனை இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இப்பொது ரொம்ப கம்மியான மார்க் எடுத்தாலும் இன்ஜினியரிங் சீட் கிடை க்கிறது எல்லா படிப்புக்கும் வேலை இருக்கிறது உங்களுக்கு திறமை இருந்தால் இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் . எனக்கு இவர்கள் அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்தால் கூட அந்த குழந்தைகளுக்கு உதவும் .இம் நீங்கள் என்ன நினைகிறீர்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் நான் தவறாக சொன்னால் அதை திருத்தி கொள்கிறேன் .