நிறைய பேசுவோம்

Saturday, June 4, 2011

கவிதை : உன்னை மறந்து விடுவேன் உரிமையோடு - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




அன்று ..
உன்னை .
முதன் முதலில் 
பார்த்த போது 
பரவசம் ..
பச்சை சட்டையில்
நீ.

உன்னை 
எதிர்பார்த்து 
காதலுடன் .
நீ வரும் 
கோயிலுக்கு 
நானும் ..
வந்தேன் ..

எப்படி ..
பைத்தியமானேன் 
உன் மீது 
பச்சை மை 
பேனா வாங்கி 
பச்சை கலர் 
நோட்டு வாங்கி 
கிறுக்கினேன் 
என் மனதை 
அது கவிதையா
தெரிய வில்லை

இதோ ..
இன்றும் ..
பிறந்த நாள் 
கொண்டாடுகிறேன் 
உன்னை ..
முதன் முதல் 
பார்த்த ..
அந்த நாளை 
பச்சை 
புது 
சேலை அணிந்து

காலம் ..
வெகு தூரம் 
சென்று விட்டது 
நேற்று ..
உன்னை நினைத்தேன் 
உரிமையோடு 

இன்று ..
உன்னை 
நினைக்கிறன் 
உரிமை இல்லாமல்

நாளை.
உன்னை 
மறந்து விடுவேன் 
உரிமையோடு 





13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் கவிதை நண்பரே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஹா அண்ணன் காதல் கவிதையில பிச்சு உதறுறீங்க! சூப்பர்!!

Ambika Krishnan said...

ஒரு பெண்ணுடைய காதல் உணர்வை மிக மென்மையாக காட்டி உள்ளீர்கள். மிகவும் அருமை. ஆண்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்த பிரபாஷ்கரன் பெண்கள் பற்றியும் எழுத ஆரம்பித்தது மகிழ்ச்சி. 1st ballலையே சிக்ஸர் அடிசுட்டிங்க பாஸ். வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

பச்சை கலரில் தொடங்கி, பச்சையோடு தொடர்ந்த காதல், பசுமையான நினைவுகளை மாத்திரம் கொடுத்து விட்டுப் பறந்துப் போய் விட்டது, அந்த நினைவுகளைக் கவிதையாக்கியுள்ளீர்கள். அருமை சகோ.

நிரூபன் said...

உங்களின் புதிய டெம்பிளேட், முன்பை விட வேகமாகவும், அருமையான லுக் ஆகவும் இருக்கிறது.

கிருபா said...

அருமையான கவிதை


ஒரு குழந்தையாக (கவிதை)

மதுரை சரவணன் said...

கவிதையின் வரிகளை மறக்க முடியவில்லை..வாழ்த்துக்கள்

பிரபாஷ்கரன் said...

/# கவிதை வீதி # சௌந்தர் said...
அசத்தல் கவிதை நண்பரே../
நன்றி

பிரபாஷ்கரன் said...

/
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஆஹா அண்ணன் காதல் கவிதையில பிச்சு உதறுறீங்க! சூப்பர்!!/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/ Ambika said...
ஒரு பெண்ணுடைய காதல் உணர்வை மிக மென்மையாக காட்டி உள்ளீர்கள். மிகவும் அருமை. ஆண்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்த பிரபாஷ்கரன் பெண்கள் பற்றியும் எழுத ஆரம்பித்தது மகிழ்ச்சி. 1st ballலையே சிக்ஸர் அடிசுட்டிங்க பாஸ். வாழ்த்துக்கள்./

பெண்கள் பற்றி எழுதியவுடன் இந்த பாராட்டு ஒரு பெண்ணிடம் இருந்து கிடைத்தது மகிழ்ச்சி

பிரபாஷ்கரன் said...

/நிரூபன் said...
பச்சை கலரில் தொடங்கி, பச்சையோடு தொடர்ந்த காதல், பசுமையான நினைவுகளை மாத்திரம் கொடுத்து விட்டுப் பறந்துப் போய் விட்டது, அந்த நினைவுகளைக் கவிதையாக்கியுள்ளீர்கள். அருமை சகோ.

June 4, 2011 7:48 AM


நிரூபன் said...
உங்களின் புதிய டெம்பிளேட், முன்பை விட வேகமாகவும், அருமையான லுக் ஆகவும் இருக்கிறது./

நன்றி தங்கள் விமர்சனம்தான் எழுதுவதற்கு டோனிக்

பிரபாஷ்கரன் said...

/Giruba said...
அருமையான கவிதை/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/ மதுரை சரவணன் said...
கவிதையின் வரிகளை மறக்க முடியவில்லை..வாழ்த்துக்கள்
/

நன்றி நண்பரே தொடர்ந்து வாருங்கள்