நிறைய பேசுவோம்

Wednesday, March 9, 2011

சிறுகதை : மனைவி - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த சிறுகதை நான் குமுதம் இதழில் எழுதி வெளி வந்தது 

இடைவேளையின் போது தன்னோட புது மனைவிக்கு ஐஸ் கிரிம் வாங்கிக் கொண்டு திரும்பிய கண்ணன் அதிர்ந்து போனான் .

அவன் மனைவியோடு அவள் சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தாள் .

அவனை கண்டதும் புன்னகைத்த அவன் மனைவி " இவ அனிதாங்க என்னோட நெருங்கிய தோழி . சின்ன வயசிலிருந்து ஒன்றாகவே படிச்சோம். பாவம் நம்ம கல்யாணத்துக்கு அவளால் வர முடியலை  " சொல்லியவள் ...

"அனிதா இவர்தான் எங்க வீட்டுக்காரர் .விற்பனை பிரதிநிதியா இருக்கார் .."

அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது .

"டேய் .. அட்டகசமான அயிடம்டா .. சும்மா டன்லப் பில்லோ மாதிரி மெத்தென்று பார்த்தாலே சூடு ஏறும்டா .." ரூமில் வந்து சொன்னான் ரவி .."

"அப்படியா சொல்லாதேடா அயிட்டத்தை மடக்கினியா.. ரேட் எவ்வளவு .."

"அதெல்லாம் எதுக்கு ? பாஸ்கர் ரூம்ல இருக்கா வா "

உடனே போய் அவளை அனுபவித்தது   நினைவிற்கு வந்தது.

இதை நம் மனைவியிடம் சொல்லிவிட்டால் என்றால் நம் மானமே போய்விடுமே.. என்ன செய்வது என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், " நீங்க கொஞ்சம் அனிதா கிட்ட பேசிக்கிட்டிருங்க .. நான் டாய்லெட் வரைக்கும் போயிட்டு வரேன் .. " அவன் மனைவி சொல்ல ..

கண்ணன் வயிற்றில் யாரோ பால் வார்த்தது போலிருந்தது. அப்போது அனிதாவே மெல்ல பேசினாள்.

"சார் .. சந்தர்ப்ப வசத்தால் என்னுடைய பிழைப்பு உடம்பை விற்று பிழைக்கும்படி ஆகிட்டது . ஆனால் உங்க மனைவிக்கிட்ட நான் நல்ல வேலை பார்ப்பதாக சொல்லிருக்கேன் . நானும் அவளும் சின்ன வயசிலேருந்து உயிருக்குயிரான சினேகிதிங்க .. இந்த விஷயம் தெரிஞ்சா அவள் தாங்கி கொள்ள மாட்டாள். தயவு செய்து என் சிநேகிதிக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் ... விசும்ப ஆரம்பித்தாள்



No comments: