நிறைய பேசுவோம்

Tuesday, June 7, 2011

கவிதை : விடியும் இரவு எனக்கு பிடிக்கவில்லை -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வானத்தில் வண்ணங்கள் 
மின்னும் வேளையில்
என் மனதில் ..
ஆயிரம் எண்ணங்கள் 

காதல் கனவுகள் 
துளிர் விட்ட
போதும் ..
என் குடும்ப 
கெளரவம் 
வெட்டுவதற்கு 
கோடாரியோடு ..

இரவு விடிந்து 
விடும் ..
ஆனால்..
விடியும் இரவு 
எனக்கு பிடிக்கவில்லை 
ஆம் ..
கனவு கலைந்து
போகிறதே ..

அலைகள் கரை 
ஒதுங்கலாம் 
அது இயற்கை 
என் ..
மன கவலைகள் 
கரை ஒதுங்க 
எந்த மன்னவன் 
கரையாய் 
வரபோகிறான் ..


1 comment:

நிரூபன் said...

அலைகள் கரை
ஒதுங்கலாம்
அது இயற்கை
என் ..
மன கவலைகள்
கரை ஒதுங்க
எந்த மன்னவன்
கரையாய்
வரபோகிறான் .//

ஒரு பெண்ணின் உணர்வுகளை அப்படியே வடித்தெடுக்கிறீர்கள் போல இருக்கிறது.

குடும்பச் சூழ் நிலயால் காதலில் கரை சேர முடியாத பெண்ணின் உணர்வுகள், இங்கே கவிதையாக வந்திருக்கிறது.