நிறைய பேசுவோம்

Tuesday, March 22, 2011

பணம்தான் இவர்களுக்கு முக்கியம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மதுரையில் சில பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விட்டன . இன்னும் சில பள்ளிகளில் தேர்வுகள் மார்ச் மாதத்திற்குள் முடியபோகிறது . ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் கொளுத்தும் வெயிலில் மாணவ மாணவிகளுக்கு இன்னும் தேர்வு தேதிகள் கூட அறிவிக்க படவில்லை ஏப்ரல் மாதம் 10 தேதி வரையிலாவது பள்ளிகளை நடத்துவதே இவர்கள் திட்டம் காரணம் சிலபஸ் முடிக்கவில்லையே என்ற அக்கறையா  கண்டிப்பாக இல்லை காரணம் ஏப்ரல் மாத பீஸ் வாங்க வேண்டும் மேலும் 10 நாள் நடந்தாலும் van மற்றும் பஸ் பீஸ் வாங்கலாமே அதற்குதான் . அரசாங்கமாவது மார்ச் 31 க்குள் அணைத்து பள்ளிகளையும் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் சில பள்ளிகளில் தேர்வு முடித்து ஜாலியாக விளையாடும் பிள்ளைகளை பார்த்து மற்ற பிள்ளைகள் எப்படி படிக்கும் மேலும் கொளுத்தும் வெயிலில் தேர்வுகளை முன்னரே முடிக்க வேண்டாமா பணம்தான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அந்த பீஸ் சேர்த்து முன்பே வாங்கி கொள்ளவேண்டியதுதானே .. இதை படிப்பவர்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

2 comments:

Ambika Krishnan said...

commercial world Boss. kalviyum maruthuvamum sevainu sonna kaalam poi ipo top level business na adhu education and treatment dhan. saamaniya makkal ku ettaa kani ya poidum pola.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பணப் பேய்களுக்கு, பிள்ளைகளின் மனம் எப்படி தெரியும்?


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!