நிறைய பேசுவோம்

Saturday, May 28, 2011

இன்ஜினியரிங் படிப்பு மீது இத்தனை மோகம் தேவையா..?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





நேற்று சுயநிதி கல்லூரியில் ஆசிரியர்களின் சம்பளம் பற்றி எழுதியிருந்தேன் .அதற்கு நண்பர் சீனா அவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து போர வேண்டும் என்று கருத்து சொல்லியிருந்தார். உண்மை ஆனால் அது அவ் வளவு எளிதல்ல காரணம் பணி பாதுகாப்பு என்பது அவர்களுக்கு முழுமையாக இல்லை . இருந்தாலும் போராடினால்தான் வெற்றி பெற முடியும் .

சரி இன்றைய பதிவிற்கு வருவோம் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் அட்மிசன் காக அழைத்து சென்றார் அங்கு நான் கண்ட காட்சிதான் என்னை ஆச்சர்ய பட வைத்தது . அங்கு ஒவ்வொரு கோர்ஸ்க்கும் நன்கொடை வாங்கி கொண்டிருந்தனர் .அப்போது ஒருவர் காலில் செருப்பு இல்லை கூலி வேலை செய்கிறாராம் தன் மகளுக்கு சீட் கேட்கிறார் நன்கொடை தர தயாராக . கொஞ்சம் கொஞ்சமாக தருகிறேன் என்கிறார் . அதற்கு எதிர்த்தார் போல் இருந்தவர் ஒரு மாதத்திற்குள கொஞ்சம் கொஞ்சம் ஆகா 1 லட்சம் கொடுக்க சொல்கிறார் இவரும் சரி என்கிறார் மனைவியிடம் கேட்டு விட்டு,  அங்கு பெரிய வியாபாரமே நடந்தது mechanical    கேட்டால் இல்லை automobile  எடுத்துக்கங்க கம்ப்யூட்டர் கேட்டால் இல்லை it  எடுத்துக்கங்க இப்படி வியாபாரம் நடக்கிறது நன்கொடையுடன் .


இப்படி பணம் கொடுத்து இன்ஜினியரிங் படிக்கணும்மா ஏன் ஆர்ட்ஸ் காலேஜ் இல் ஒரு degreee  படித்தால் வேலை கிடைக்காதா கஷ்டபட்டாவது நன்கொடையை அள்ளி கொடுத்து இப்படி படிக்கணுமா ஏன் இந்த மோகம் எத் தனை இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இப்பொது ரொம்ப கம்மியான மார்க் எடுத்தாலும் இன்ஜினியரிங் சீட் கிடை க்கிறது   எல்லா படிப்புக்கும் வேலை இருக்கிறது உங்களுக்கு திறமை இருந்தால் இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் . எனக்கு இவர்கள் அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்தால் கூட அந்த குழந்தைகளுக்கு உதவும் .இம் நீங்கள் என்ன நினைகிறீர்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் நான் தவறாக சொன்னால் அதை திருத்தி கொள்கிறேன் .




12 comments:

இராஜராஜேஸ்வரி said...

"இன்ஜினியரிங் படிப்பு மீது இத்தனை மோகம் தேவையா..?"
இவர்கள் அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்தால் கூட அந்த குழந்தைகளுக்கு உதவும் .
Very useful thought.

அமுதா கிருஷ்ணா said...

முதல் முதலில் இஞ்சினியர் படிக்க வைக்கும் குடும்பம் மிக ஆவலுடன் பணம் கொடுத்தாவது படிக்க வைக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்.வேலை கிடைக்காமல் இருக்கும் இஞ்சினியர்களை பற்றி தெரிந்து கொள்வது இல்லை. அரியர்ஸ் வைத்தாவது படித்து விடவேண்டும் என்பது இங்கு பெற்றோர் எதிர்பார்ப்பு.

Ambika Krishnan said...

தன் மகன் ஒரு டீச்சர் அக்கௌன்டன்ட் பேங்க் கிளெர்க் இப்டி எல்லாம் சொல்லிக்கிறதா விட ஒரு இஞ்சினியர்ன்னு சொல்லிக்க தான் பெருமை படுறாங்க. என்ன பண்றது எல்லாம் காலத்தின் கோலம். ஆனால் கண்டிப்பா இந்த நிலை மாறும். கலைக் கல்லூரிகள் மார்க்கெட் மீண்டும் உயரும் ஆர்ட்ஸ் படித்தவர்களும்மதிக்கப்படுவார்கள் கண்டிப்பாக நம்புவோம். நாளை நமதே...

நிரூபன் said...

எவ்ளோ கஸ்டப்பட்டாவது இன்ஜினியரிங் படித்து இட வேண்டும் என்று சிந்திப்போர், தமது எதிர் காலம் எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்கத் தவறுவதால் தான் இத்தகைய சூழ் நிலைக்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன்.

படிப்பின் தரத்தினை நினைத்துப் பணம் கொடுத்துப் படிக்க நினைக்கிறார்களேயன்றி, அந்தத் துறைக்குள் செல்வதால் தமக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்குமா அல்லது தம்மால் செலவழிக்கும் இவ்வளவு பணத்தினையும் ஈட்ட முடியுமா என்பதனைச் சிந்திக்காதோரின் செயற்பாடு தான் இந் நிலமைக்கு காரணம்,

பாலா said...

மக்கள் மத்தியில் இருக்கும் தவறான புரிதல்களில் இதுவும் ஒன்று. இது கொஞ்ச நாளைக்குத்தான். விரைவில் இந்த நிலை மாறும்.

ரிஷபன் said...

படிப்பை வியாபாரமாக்கியதுதான் குற்றம்..

பிரபாஷ்கரன் said...

/
இராஜராஜேஸ்வரி said...
"இன்ஜினியரிங் படிப்பு மீது இத்தனை மோகம் தேவையா..?"
இவர்கள் அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்தால் கூட அந்த குழந்தைகளுக்கு உதவும் .
Very useful thought./
நன்றி

பிரபாஷ்கரன் said...

/அமுதா கிருஷ்ணா said...
முதல் முதலில் இஞ்சினியர் படிக்க வைக்கும் குடும்பம் மிக ஆவலுடன் பணம் கொடுத்தாவது படிக்க வைக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்.வேலை கிடைக்காமல் இருக்கும் இஞ்சினியர்களை பற்றி தெரிந்து கொள்வது இல்லை. அரியர்ஸ் வைத்தாவது படித்து விடவேண்டும் என்பது இங்கு பெற்றோர் எதிர்பார்ப்பு./

நன்றி

பிரபாஷ்கரன் said...

/நிரூபன் said...
எவ்ளோ கஸ்டப்பட்டாவது இன்ஜினியரிங் படித்து இட வேண்டும் என்று சிந்திப்போர், தமது எதிர் காலம் எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்கத் தவறுவதால் தான் இத்தகைய சூழ் நிலைக்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன்.

படிப்பின் தரத்தினை நினைத்துப் பணம் கொடுத்துப் படிக்க நினைக்கிறார்களேயன்றி, அந்தத் துறைக்குள் செல்வதால் தமக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்குமா அல்லது தம்மால் செலவழிக்கும் இவ்வளவு பணத்தினையும் ஈட்ட முடியுமா என்பதனைச் சிந்திக்காதோரின் செயற்பாடு தான் இந் நிலமைக்கு காரணம்,/

நன்றி

பிரபாஷ்கரன் said...

Ambika said...
தன் மகன் ஒரு டீச்சர் அக்கௌன்டன்ட் பேங்க் கிளெர்க் இப்டி எல்லாம் சொல்லிக்கிறதா விட ஒரு இஞ்சினியர்ன்னு சொல்லிக்க தான் பெருமை படுறாங்க. என்ன பண்றது எல்லாம் காலத்தின் கோலம். ஆனால் கண்டிப்பா இந்த நிலை மாறும். கலைக் கல்லூரிகள் மார்க்கெட் மீண்டும் உயரும் ஆர்ட்ஸ் படித்தவர்களும்மதிக்கப்படுவார்கள் கண்டிப்பாக நம்புவோம். நாளை நமதே.../

நன்றி

பிரபாஷ்கரன் said...

பாலா said...
மக்கள் மத்தியில் இருக்கும் தவறான புரிதல்களில் இதுவும் ஒன்று. இது கொஞ்ச நாளைக்குத்தான். விரைவில் இந்த நிலை மாறும்./

நன்றி

பிரபாஷ்கரன் said...

ரிஷபன் said...
படிப்பை வியாபாரமாக்கியதுதான் குற்றம்../


நன்றி