நிறைய பேசுவோம்

Thursday, May 26, 2011

தமிழ் பெண்ணின் கையில் பீர் பாட்டில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



இந்த படம் facebook  இல் நண்பர்  ஒருவர் போட்டிருந்தார் இதை பார்த்தவுடன் ஆச்சரியம் தமிழ் பெண்ணின் கையில் பீர் பாட்டில் சும்மா கூட போஸ் கொடுத்திருக்கலாம் இருந்தும் இப்படி எப்படி முடிந்தது மிகுந்த வருத்தம் அடைந்தேன் இதை நான் இங்கே வெளியிட்ட காரணம் யாரும் இது போன்று இனி செய்யாதீர்கள் என்று சொல்வதற்குதான் உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்        


13 comments:

Katz said...

நீங்க ரொம்ப நல்லவரு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

காலம் மாறிப் போச்சுன்னு சொல்றதா? இல்லை கலி காலம்னு சொல்றதா?

”தளிர் சுரேஷ்” said...

தமிழ் பெண்'கள்' ரொம்பவும் மாறி விட்டார்கள் .அதான் கையில் கள்ளுடன் நிற்கிறார்'கள்'

சாகம்பரி said...

recently girls are not aware their safty lines -virutually laid to secure their life.

Anonymous said...

எங்க உறவினர் பாட்டி 70-80களிலேயே சாராயம் அடிச்சிட்டு பீடி குடிக்கும்.

தமிழ்நாட்டுப் பெண்கள்னா பியர் குடிக்கக் கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்குங்களா?

இக்காலப் பெண்கள் படிச்சிட்டு சுய அறிவோட அவுங்களே முடிவெடுக்கட்டும் எது நல்லது, எது கெட்டதுன்னு.

நீங்கள் ஏன் அவர்களுக்கு நாட்டாமை ஆகிறீர்கள்?

Anonymous said...

அந்தப் பொண்ணு தமிழ்தான்னு உறுதியாத் தெரியுமா?

அப்படியே தமிழா இருந்தாத்தான் என்ன?

இதுவே ஒரு ஆந்திர, கேரள, மராத்திப் பெண்ணுன்னா ஓக்கேவா?

அவுங்க ஒழுக்கமே அவ்வளவுதான்னுட்டு ஒதுங்கிருவீங்களா?

பெண்கள நீங்க மொதல்ல கண்ணகியாக்கி பின்னால அவுங்க மாதவியாக ஃபோர்ஸ் பண்ணாதீங்க.

Anonymous said...

பீர் பாட்டில் இருக்கக் கூடாதா? இவர் தமிழ் பெண் என எப்படி சொன்னீர்கள் ... பின்னே நிற்கும் அம்மா தென்னிந்திய சாயலில் இருப்பதாலா? சரி அப்படியே தமிழ் பெண் என வைத்துக் கொள்வோம்.. இதில் என்னக் குற்றம் கண்டீர்கள்.. அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பம் .... !!!

கனடாவில் வந்துப் பாருங்க.. பீர்க் கடையில் தமிழ் பெண்கள் தான் அதிகம் நின்று பியர் வாங்குகின்றார்கள்.. யாரும் எவரையும் சாட்டை செய்வதில்லை. குடித்துவிட்டு பொது இடத்தில் வாந்தி எடுத்தாலோ, அல்லது கூச்சல் போட்டாலோ தான் தப்பு.. குடித்து விட்டு தானுண்டு தன் வேலை உண்டு எனப் போனால் பிரச்சனை இல்லை ...

ஆணோ ? பெண்ணோ குடிப்பது உடலுக்கும் மனதுக்கும் தீங்கானது தான் .. ஆனால் நாம் கலாச்சாரக் காவலர்களாக மாறி மற்றவரின் தனியுரிமைக்குள் நுழைவது தவறாகும் .

ரோகிணிசிவா said...

சோ வாட் !

Ilavenil said...

//ஆணோ ? பெண்ணோ குடிப்பது உடலுக்கும் மனதுக்கும் தீங்கானது தான் .. ஆனால் நாம் கலாச்சாரக் காவலர்களாக மாறி மற்றவரின் தனியுரிமைக்குள் நுழைவது தவறாகும்//


well said !!

அமர பாரதி said...

உங்களுக்கு யாருங்க கலாச்சார போலீஸ் போஸ்ட் கொடுத்தது. மேலும் அந்த புகைப் படத்தை வெளியிட அந்த பெண்ணிடம் அனுமதி பெற்றீர்களா? உங்களுடைய அட்வைஸை உங்களுடன் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் கலாச்சாரத்தை காப்பாற்றும் சிரமமான வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

Ambika Krishnan said...

அதென்னங்க பொண்ணுங்க என்ன பண்ணினாலும் எல்லாரும் சப்போர்ட்க்கு வர்ரிங்க. நம்ம குடும்பத்து பொண்ணுங்க கலாச்சாரத்துக்கு மட்டும் தான் நாம காவல் இருக்கணும்னு அவசியம் கிடையாது. பெண்களை மதிக்கிற யாரும் அந்த போட்டோ பாத்து கோபப்படதான் செய்வாங்க. பொண்ணுங்களுக்கு நல்ல விஷயங்கள்ல சப்போர்ட் பண்ணுங்க. இப்டி சீரழியற விஷயங்களுக்கு பண்ணாதிங்க. இங்க சப்போர்ட் பண்ணிருக்க எல்லார் குடும்பங்கள்ளையும் பெண்கள் இருப்பாங்க. அவங்க மேல காட்டுற அக்கறைய எல்லா பொண்ணுங்க மேலயும் காட்டுங்க.

Kishore R Sudarsan said...

இது உங்க வீட்டு பொண்ணா இருந்தா இப்டி தான் பண்ணுவீங்களா சார்....

Anonymous said...

Holding a Bottle doesn't prove she drinks, drinking beer by girls doesn't prove they are bad, why should only man have the pleasure, why no women too.......