நிறைய பேசுவோம்

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 6, 2011

கவிதை : உன் கைகள் என்னை .. தீண்டும் போது - பிரபாஷ்கரன்





உன் ..
முகம் பார்க்க
தவமிருந்தேன்

நீ. 
என் விரல் 
பற்றிய போது 
முகம் சிவந்தது 

உன் கைகள் 
என்னை ..
தீண்டிய  போது
வயிற்றில் ..
ஜில்லென்ற 
ஐஸ் கட்டி 
பரவியது

நீ ..
முத்தமிட 
வந்த போது 
என் ..
இமைகளும் 
வெட்கத்தில்  
மூடி கொண்டது 

உன் தோளில் 
முகம் ..
சாய்க்கும் 
வேளையில் 
பறந்தது  பட்டம் பூச்சிகள்
என் உடலெங்கும் 

என்ன விலை 
தந்தும் 
பெற ஏங்குகிறேன் 
உன் காதலை ..

கனவில் மட்டும் 
வரும் ..
என் காதலனே 
நினைவில் ..
என்று ..
நீ வரப் போகிறாய்






Saturday, June 4, 2011

கவிதை : உன்னை மறந்து விடுவேன் உரிமையோடு - பிரபாஷ்கரன்





அன்று ..
உன்னை .
முதன் முதலில் 
பார்த்த போது 
பரவசம் ..
பச்சை சட்டையில்
நீ.

உன்னை 
எதிர்பார்த்து 
காதலுடன் .
நீ வரும் 
கோயிலுக்கு 
நானும் ..
வந்தேன் ..

எப்படி ..
பைத்தியமானேன் 
உன் மீது 
பச்சை மை 
பேனா வாங்கி 
பச்சை கலர் 
நோட்டு வாங்கி 
கிறுக்கினேன் 
என் மனதை 
அது கவிதையா
தெரிய வில்லை

இதோ ..
இன்றும் ..
பிறந்த நாள் 
கொண்டாடுகிறேன் 
உன்னை ..
முதன் முதல் 
பார்த்த ..
அந்த நாளை 
பச்சை 
புது 
சேலை அணிந்து

காலம் ..
வெகு தூரம் 
சென்று விட்டது 
நேற்று ..
உன்னை நினைத்தேன் 
உரிமையோடு 

இன்று ..
உன்னை 
நினைக்கிறன் 
உரிமை இல்லாமல்

நாளை.
உன்னை 
மறந்து விடுவேன் 
உரிமையோடு 





Friday, June 3, 2011

கவிதை : நிஜத்தில் நானும் தேடுகிறேன் -பிரபாஷ்கரன்





இதயத்தில் ..
கனவுகள் 
நிஜமாகுமா..
என்று ..
தெரியாத போதும் 
ஏனோ ..
நினைவுகள் 
சுகம்தான் 
காரணம் 
அதில் 
அவனின் நினைவுகள் 
நிஜத்தில் 
நானும் தேடுகிறேன் 
என் மன்னவனிடம் 
என்னவனை ..
கிடைக்காது 
என்று ..
தெரிந்த போதும் ....





Thursday, June 2, 2011

கவிதை:அமிர்தமும் நஞ்சுதான் -பிரபாஷ்கரன்





அளவுக்கு 
மிஞ்சினால் 
அமிர்தமும் 
நஞ்சுதான் 
அதனால்தான் 
அடிக்கடி முத்தம் 
தர மறுக்கிராயோ





Wednesday, June 1, 2011

200 வது பதிவு -கவிதை :நிழல் நிஜமாகிறது -பிரபாஷ்கரன்

இது எனது 200  வது பதிவு 2011 பெப்ரவரி இல்தான் வலைத்தளம் துவங்கினேன் .விரைவாக 200  வது பதிவு போடுவதற்கு காரணம் உங்கள் அன்பும் ஆதரவும் .முக்கியமாக நான் நன்றி சொல்லவேண்டியது தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது பல ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் சிறப்பாக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை முடியும் என்று நம்புகிறேன் .இந்த பதிவிற்கு என்ன கவிதை எழுதலாம் என்ற போது face book இல் இந்த புகைப்படம் நண்பர் மூலமாக கிடைத்தது அருமையான புகைப்படம் நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு படமும் கவிதையும் .படத்தை கூர்ந்து கவனியுங்கள் 




அன்பே ..
உன் 
பார்வைக்காக 
ஏங்கி ..
நானும் 
தொடர்கிறேன்
நிழல் போல் 
தொடரும் 
எனக்கு 
நிழலில் 
தரப்போகும் 
இந்த முத்தம் 
நிஜமாகும் 
நாளை 
எண்ணி ..
இதோ நானும் 
உன்னை நோக்கி 

கவிதை : உள்ளே துடித்து கொண்டிருப்பது உன் இதயமும்தான்- பிரபாஷ்கரன்

அடியே .
பத்திரம் ..
நீ ..
வெட்டி எடுத்தது 
என் இதயம்
ஆனால்..
உள்ளே 
துடித்து கொண்டிருப்பது 
உன் இதயமும்தான் 
வைத்து கொள் 
துடிக்கும் 
இதயத்தில் 
கேட்டு பார் 
உன் பெயரை 


கவிதை : அன்பே .. உன்னை நினைத்து - பிரபாஷ்கரன்





அன்பே ..
உன்னை 
நினைத்து 
கவிதை 
எழுதினேன்
புரியவில்லை 
உன் ..
மனதை போல் 





Tuesday, May 31, 2011

கவிதை : கார் வாங்க காசு இல்லை - பிரபாஷ்கரன்




இந்த படத்தை பார்த்து சிக்கனம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி போயவிடதிர்கள் முறையான பயிற்சி முக்கியம் 

நாளை..
மீண்டும் 
பெட்ரோல் விலை
உயர்கிறது 
ஹெல்மெட் 
கட்டாயம் 
போட வேண்டும் 
கார் வாங்க 
காசு இல்லை 
பஸ்சில் போக 
மனசில்லை
என்ன ..
செய்வது 
இப்படிதான் 
போக முடியும் 





Monday, May 30, 2011

கவிதை : இதயம் இல்லாதவனை காதலிக்க மாட்டேன் என்கிறாய் ..-பிரபாஷ்கரன்






உன் ..
முகவரிகளை 
பார்த்து 
என் முகவரிகளை 
தொலைத்தேன் 
இதயத்தை 
கேட்டாய் 
கொடுத்தேன் 
ஆனால்..
இப்போதோ 
இதயம் இல்லாதவனை 
காதலிக்க மாட்டேன் 
என்கிறாய் ..
இது என்ன 
நியாயம் 


Sunday, May 29, 2011

கவிதை : தூக்கம் - பிரபாஷ்கரன்






தூக்கம் 


மனதில் ஏற்படும் 
வலிகளுக்கு
சிறந்த மருந்து 
பல நேரங்களில் 





Wednesday, May 25, 2011

கவிதை : தொலைந்து போனாய் நீ ..- பிரபாஷ்கரன்





தொலை தூரம் 
சென்று விட்டாய்..
நீ. 
தொலைந்து போனாய்
நீ ..
என்னை விட்டு
மறந்து போனாய்
நீ ..
ஆனாலும் 
நான் ..
உன்னை 
தேடவில்லை 
காரணம் 
நீ ..
என்னிடம் 
விட்டு சென்ற 
நினைவுகள் 





Friday, May 20, 2011

கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா - பிரபாஷ்கரன்




கவிஞர்கள் ..
பிறக்கிறார்களா 
உருவாக்க படுகிறார்களா 
என்ற ..
சந்தேகம் 
அன்பே ..
உன்னை பார்த்தவுடன் 
தீர்ந்து விட்டது ..





Thursday, May 19, 2011

கவிதை : புன்னகை - பிரபாஷ்கரன்







கோடை காலத்திலும் 
இளவேனிற் காலம் 
உன் ..
புன்னகைதான் 





Wednesday, May 18, 2011

கவிதை : இதயம் துடிப்பதை ஈ .சி .ஜி .. எடுக்க வேண்டுமாம்- பிரபாஷ்கரன்







சர்கரையின் அளவு 
எகிறி விட்டதாம் 
ரத்த அழுத்தம் 
உயர்ந்து விட்டதாம்
இதயம் துடிப்பதை 
ஈ .சி .ஜி ..
எடுக்க வேண்டுமாம்
எப்படி ..
சொல்வேன் ..
இவர்களிடம் 
நீ ..
தந்த முத்தம்தான் 
காரணம் என்று 





Tuesday, May 17, 2011

கவிதை :பட்டம் விட மாஞ்ச கயிறு தேடினேன் -பிரபாஷ்கரன்





பட்டம்  விட 
மாஞ்சா   கயிறு 
தேடினேன் 
நேற்று ..
அப்பா அடுப்பில் 
போட்ட பம்பரத்தை 
தேடி பார்த்தேன்
மறைத்து வைத்த 
கில்லியயும் 
கோலி குண்டையும் 
தேடும் வேளையில்
கலைந்து..
போனது தூக்கம் 
எதிரே ..
பையனும் பொண்ணும
கம்ப்யூட்டர் முன் 
கேம்ஸ் விளையாடி 
கொண்டிருந்தனர் 
தூக்கம் ஏனோ 
மீண்டும் வரவில்லை   



Monday, May 16, 2011

கவிதை : கனவுகள் .. கலைந்தாலும் --பிரபாஷ்கரன்









நேற்று 
உன்னில் நான்
என்னில் நீ 
இன்று 
உன்னில் நான் 
ஆனால்..
நான் மட்டுமா 
என்னில் நீ 
நீ மட்டுமா 
காலம் 
புரட்டி போட்டது 
கனவுகள்
கலைந்தாலும் 
நினைவுகள் 
நிச்சயம் 
கனவுகளாய் 




Saturday, May 14, 2011

கவிதை :ஏ.சி ..போடமாலேயே - பிரபாஷ்கரன்







கோடை வெப்பம் 
என்னை தாக்கவில்லை 
ஏ.சி ..போடமாலேயே 
ஜில் 
காரணம்..
உன் புன்னகை 



Wednesday, May 11, 2011

கவிதை : சுயநலம் - பிரபாஷ்கரன்


தோற்று போகும் 
காதலில் 
என்றும் 
ஜெயித்து கொண்டிருப்பது 
சுயநலம் ..

Tuesday, May 10, 2011

கவிதை : நிலா சோறு - பிரபாஷ்கரன்

என்னவளே 
எங்கே சென்றாய்
சீக்கிரம் வா ..
அழும் குழந்தைக்கு 
நிலாச் சோறு 
ஊட்ட வேண்டும்


Wednesday, May 4, 2011

கவிதை : மௌனம் .. பிரபாஷ்கரன்



மௌனம் ..
பல நேரங்களில் 
பதில் 
ஆனால்..
உன் மௌனம் 
புரியாத புதிர் ..