நிறைய பேசுவோம்

Showing posts with label 200 வது பதிவு. Show all posts
Showing posts with label 200 வது பதிவு. Show all posts

Wednesday, June 1, 2011

200 வது பதிவு -கவிதை :நிழல் நிஜமாகிறது -பிரபாஷ்கரன்

இது எனது 200  வது பதிவு 2011 பெப்ரவரி இல்தான் வலைத்தளம் துவங்கினேன் .விரைவாக 200  வது பதிவு போடுவதற்கு காரணம் உங்கள் அன்பும் ஆதரவும் .முக்கியமாக நான் நன்றி சொல்லவேண்டியது தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது பல ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் சிறப்பாக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை முடியும் என்று நம்புகிறேன் .இந்த பதிவிற்கு என்ன கவிதை எழுதலாம் என்ற போது face book இல் இந்த புகைப்படம் நண்பர் மூலமாக கிடைத்தது அருமையான புகைப்படம் நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு படமும் கவிதையும் .படத்தை கூர்ந்து கவனியுங்கள் 




அன்பே ..
உன் 
பார்வைக்காக 
ஏங்கி ..
நானும் 
தொடர்கிறேன்
நிழல் போல் 
தொடரும் 
எனக்கு 
நிழலில் 
தரப்போகும் 
இந்த முத்தம் 
நிஜமாகும் 
நாளை 
எண்ணி ..
இதோ நானும் 
உன்னை நோக்கி