நிறைய பேசுவோம்

Sunday, October 23, 2011

காதல் தீபாவளி


எல்லோரும் ..
தீபாவளிக்கு 
பாட்டாசும் 
இனிப்பும் ..
புத்தாடையுமாக 
கொண்டாடுகிறார்கள் 
ஆனால் ..
நான் ..
தினம் தினம் 
தீபாவளி 
கொண்டாடுகிறேன் 
அவளின் 
மத்தாப்பு சிரிப்பிலும் 
அவள் தரும் 
இனிப்பு முத்தத்திலும் 
அவளே புத்தாடைதான் 
................

Saturday, October 22, 2011

விஞ்ஞானிகளே என் .. காதலிக்கு


நிலவில் ..
தண்ணீர் இருக்கிறது 
என்று ..
கண்டு பிடித்த 
விஞ்ஞானிகளே 
என் ..
காதலிக்கு 
இதயம் உண்டா 
என்று ..
ஆராய்ச்சி 
செய்து ..
சொல்லுங்களேன் 

Wednesday, October 19, 2011

செல்லாத வாக்கைதான் அள்ளி வீசுகிறாள்


நானும் 
அவளிடம் 
இதய வாக்கு
சேகரிக்க 
சென்றேன் ..
ஏனோ ..
செல்லாத வாக்கைதான் 
அள்ளி வீசுகிறாள் 
என்ன செய்வது 
வழக்கம் போல் 
மீண்டும் மீண்டும்
அவள் ..
இதய வாக்கிற்காக 
போட்டியிடுகிறேன் 
ஜெயிக்காமலா போவேன் ..

Sunday, October 16, 2011

என்னை .. பைத்தியம் என்கின்றனர்

தொலைந்து ..
போன மனதை 
தேடினேன் ..
அவளிடம் ..
கிடைக்கவில்லை 
மனமில்லா 
அவளிடம் .. எப்படி
கிடக்கும் ..
இருந்தும் .
தேடுகிறேன் 
ஆனால்..
என்னை ..
பைத்தியம் 
என்கின்றனர் 


Saturday, October 8, 2011

பார்த்து ரசியுங்கள் ரஜினியின் புதிய புகைப்படங்களை

ரஜினியின் புதிய புகைப்படங்கள் 




Tuesday, October 4, 2011

தங்கம் வாங்கும் முன் யோசித்து வாங்குங்கள்


நேற்று மனைவிக்கு மூக்குத்தி வாங்கலாம் என்று நகை கடைக்கு சென்றேன் .மூக்குத்தியின் விலை 450 ரூபாய் செய்கூலி இதில் அடக்கம் 100 ரூபாய் பழைய மூக்குத்தி ஒன்றல்ல இரண்டு போட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விலை 125  ரூபாய் .என்ன நியாயமோ தெரியவில்லை எப்போது         நகை கடைக்கு சென்றாலும் எனக்கு பிரச்சினைதான் அவர்கள் சொல்லும் செய்கூலி சேதாரம் எல்லாமே 15  சதம் கூடுதல் விலை தான் வருகிறது .பொதுவாக நாம் எந்த பொருள் வாங்கினாலும் ஒரு விலை இருக்கும் .ஆனால் இந்த நகையில் மட்டும் KDM க்கு அன்றைய விலையை விட 10 சதம் கூட இருக்கும் ஆனால் விற்கும் போது   அன்றைய நகை விலைக்கு எடுப்பார் அன்றைய விலையை விட 10 சதம் கூட எடுத்து கொள்ள மாட்டார் .

செய்கூலி சேதாரம் எல்லாம் வாங்கும் போது தான் விற்கும் போது கூட்டி களைத்து பார்த்தால் சுமார் 15 முதல் 20 சதம் நமக்கு நஷ்டம் தான் . 

ஆகவே e -gold    முறையில் தங்கத்தை வாங்கி சேமியுங்கள் சேதாரம் இல்லை செய்கூலி இல்லை வேண்டும் போது விற்று கொள்ளலாம் . இது நான் பட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணம் .இதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ..

Sunday, October 2, 2011

சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம்


அரசு கேபிள் இப்போது நன்கு தெரிகிறது .சன் டி.வி மட்டும் தெரிய வில்லை மக்கள் அனைவரும் விஜய் டி.வி விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர் .இது சன் டி.விக்குதானே நஷ்டம் .மேலும் அதிக மக்கள் பார்க்காமல் அந்த சேனலுக்கு எப்படி விளம்பரங்கள் கிடைக்கும் .இதையெலாம் அவர்கள் யோசிக்க மாட்டார்களா .அரசியல் பார்க்காமல் சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம் .ஒரு வேலை டிஷ் விற்பனை ஆகும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் .இணைத்தால் நம் மக்களும் சந்தோஷ படுவார்கள் .. பாப்போம் நாம் சொல்வதை சொல்வோம் . அப்புறம் அவர்கள் பாடு .