சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது .வெற்றி பெற்றவரை அறிவிக்கும் போது பெற்ற வாக்குகள் அறிவிக்க படவில்லை
கண்டிப்பாக இதில் எதோ நடந்திருக்கு சாய் சரணுக்கு மதுரையில் பல இடங்களில் பேனர் வாக்களிக்கும்படி இவர்கள் என்ன அரசியல் வாதிகளா இப்படி ஒட்டு கேட்பதற்கு இது மாதிரி எத்தனை இடங்களில் வைத்தார்களோ .. இது மாதிரி விளம்பரம் செய்து நடத்தும் போட்டிகளை தயவு செய்து நிறுத்துங்கள்
அடுத்த உச்ச கட்டம் முடிவு அறிவித்த பிறகும் நிகழ்ச்சி தொடர்கிறது அதில் ஒவோருவர் பெற்ற வாக்குகள் சொல்லினர் . இசை அமைப்பாளர்கள் சத்ய பிரகாஷ் தான் சரியாக பாடினார் அவருக்குதான் நாங்கள் அதிக மதிப்பெண் கொடுத்தோம் . மக்கள் தான் சாய் சரணுக்கு வாக்களித்தனர் என்று சாய் சரனை வைத்து கொண்டு சொல்கின்றனர் இது வெற்றி பெற்றவரை அவமானபடுத்தியது போல் உள்ளது . இவர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக எதையாவது செய்வது என்று வழக்கத்தை கொண்டுள்ளனர் தயவு செய்து இதை மாற்றுங்கள் வெளிபடையாக நிகழ்ச்சியை நடத்துங்கள்





