நிறைய பேசுவோம்

Wednesday, June 1, 2011

கவிதை : உள்ளே துடித்து கொண்டிருப்பது உன் இதயமும்தான்- பிரபாஷ்கரன்

அடியே .
பத்திரம் ..
நீ ..
வெட்டி எடுத்தது 
என் இதயம்
ஆனால்..
உள்ளே 
துடித்து கொண்டிருப்பது 
உன் இதயமும்தான் 
வைத்து கொள் 
துடிக்கும் 
இதயத்தில் 
கேட்டு பார் 
உன் பெயரை 


கவிதை : அன்பே .. உன்னை நினைத்து - பிரபாஷ்கரன்





அன்பே ..
உன்னை 
நினைத்து 
கவிதை 
எழுதினேன்
புரியவில்லை 
உன் ..
மனதை போல் 





Tuesday, May 31, 2011

கவிதை : கார் வாங்க காசு இல்லை - பிரபாஷ்கரன்




இந்த படத்தை பார்த்து சிக்கனம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி போயவிடதிர்கள் முறையான பயிற்சி முக்கியம் 

நாளை..
மீண்டும் 
பெட்ரோல் விலை
உயர்கிறது 
ஹெல்மெட் 
கட்டாயம் 
போட வேண்டும் 
கார் வாங்க 
காசு இல்லை 
பஸ்சில் போக 
மனசில்லை
என்ன ..
செய்வது 
இப்படிதான் 
போக முடியும் 





Monday, May 30, 2011

சுவாமி நடராஜர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார்





மீண்டும் மனிஷ் அரோரா என்பவர் சுவாமி நடராஜரர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார் .தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் எப்படி நடை பெறுகின்றன .இவர் இந்தியர் என்றும் கூறபடுகிறது அவர் பெயரை பார்த்தால் இந்து என்று தான் தோன்றுகிறது பின் எப்படி .. இதை உங்களிடம் தெரியபடுத்துவது உங்கள் கருத்துகள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே 


கவிதை : இதயம் இல்லாதவனை காதலிக்க மாட்டேன் என்கிறாய் ..-பிரபாஷ்கரன்






உன் ..
முகவரிகளை 
பார்த்து 
என் முகவரிகளை 
தொலைத்தேன் 
இதயத்தை 
கேட்டாய் 
கொடுத்தேன் 
ஆனால்..
இப்போதோ 
இதயம் இல்லாதவனை 
காதலிக்க மாட்டேன் 
என்கிறாய் ..
இது என்ன 
நியாயம் 


Sunday, May 29, 2011

கவிதை : தூக்கம் - பிரபாஷ்கரன்






தூக்கம் 


மனதில் ஏற்படும் 
வலிகளுக்கு
சிறந்த மருந்து 
பல நேரங்களில் 





Saturday, May 28, 2011

இன்ஜினியரிங் படிப்பு மீது இத்தனை மோகம் தேவையா..?






நேற்று சுயநிதி கல்லூரியில் ஆசிரியர்களின் சம்பளம் பற்றி எழுதியிருந்தேன் .அதற்கு நண்பர் சீனா அவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து போர வேண்டும் என்று கருத்து சொல்லியிருந்தார். உண்மை ஆனால் அது அவ் வளவு எளிதல்ல காரணம் பணி பாதுகாப்பு என்பது அவர்களுக்கு முழுமையாக இல்லை . இருந்தாலும் போராடினால்தான் வெற்றி பெற முடியும் .

சரி இன்றைய பதிவிற்கு வருவோம் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் அட்மிசன் காக அழைத்து சென்றார் அங்கு நான் கண்ட காட்சிதான் என்னை ஆச்சர்ய பட வைத்தது . அங்கு ஒவ்வொரு கோர்ஸ்க்கும் நன்கொடை வாங்கி கொண்டிருந்தனர் .அப்போது ஒருவர் காலில் செருப்பு இல்லை கூலி வேலை செய்கிறாராம் தன் மகளுக்கு சீட் கேட்கிறார் நன்கொடை தர தயாராக . கொஞ்சம் கொஞ்சமாக தருகிறேன் என்கிறார் . அதற்கு எதிர்த்தார் போல் இருந்தவர் ஒரு மாதத்திற்குள கொஞ்சம் கொஞ்சம் ஆகா 1 லட்சம் கொடுக்க சொல்கிறார் இவரும் சரி என்கிறார் மனைவியிடம் கேட்டு விட்டு,  அங்கு பெரிய வியாபாரமே நடந்தது mechanical    கேட்டால் இல்லை automobile  எடுத்துக்கங்க கம்ப்யூட்டர் கேட்டால் இல்லை it  எடுத்துக்கங்க இப்படி வியாபாரம் நடக்கிறது நன்கொடையுடன் .


இப்படி பணம் கொடுத்து இன்ஜினியரிங் படிக்கணும்மா ஏன் ஆர்ட்ஸ் காலேஜ் இல் ஒரு degreee  படித்தால் வேலை கிடைக்காதா கஷ்டபட்டாவது நன்கொடையை அள்ளி கொடுத்து இப்படி படிக்கணுமா ஏன் இந்த மோகம் எத் தனை இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இப்பொது ரொம்ப கம்மியான மார்க் எடுத்தாலும் இன்ஜினியரிங் சீட் கிடை க்கிறது   எல்லா படிப்புக்கும் வேலை இருக்கிறது உங்களுக்கு திறமை இருந்தால் இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் . எனக்கு இவர்கள் அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்தால் கூட அந்த குழந்தைகளுக்கு உதவும் .இம் நீங்கள் என்ன நினைகிறீர்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் நான் தவறாக சொன்னால் அதை திருத்தி கொள்கிறேன் .