நிறைய பேசுவோம்

Thursday, September 6, 2012

கந்தக பூமியை கண்ணீர் பூமி


கந்தக பூமியை 
கண்ணீர் பூமி 
ஆக்கியது..
யார்.. 
அதிகாரிகளா 
முதலாளிகளா 
யாராயிருந்தாலும் 
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..

Sunday, September 2, 2012

உன் ஸ்பரிசம் ..


நினைவுகளில் ..
உன் .. வாசம் 
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக 
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட 
வரும் போது 
விட்டு விலகும் 
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்

Sunday, August 19, 2012

கற்கள் எதற்கு


நான் ..
கட்டபோகும் ..
மாளிகைக்கு 
கற்கள் எதற்கு 
என்னவளின் 
இதயம் மட்டும் 
போதும்

Friday, August 17, 2012

மின்னி மறையும்


மின்னி மறையும் 
மின்னல்களாய் 
அவள் ..
பார்வை ..
என்று ..
இதயம் 
வெடிக்க போகிறதோ ..
இடியாய் ..

Tuesday, August 14, 2012

சுதந்திர தினத்தன்று

இது நான் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிகையில் வெளிவந்தது 

'எல்லோருக்கும் 
விடுதலை 
கூறியவர் 
பறக்க விட்டார்
புறாக்களை 
கிடைத்தது 
விடுதலை 
கூண்டிலிருந்து 
புறாக்களுக்கு ..'
----------

'கம்பி கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..'

உன் .. இடை வெளியில் நான் .. முகம் பார்க்கலாமா ..


உன் விழிகளில் 
உறங்க ..
இடம் தாயேன் 
என்..
உயிரையும் தருகிறேன் 
விலையாக..
உன் ..
இடை வெளியில் 
நான் ..
முகம் பார்க்கலாமா ..
முகம் பார்த்து
தலை ..
வாரி கொள்கிறேன் ..
தலை வாரிக்கொள்ள
உன் ..
விரல்களை
தாயேன் ..
கலைந்த ..
தலை முடியை
சீவி விட..
முத்தங்கள்
தந்து .விடாதே ..
சத்தமில்லாமல்
கடித்து ..
விட்டு போகின்றன
என் கன்னத்தை
எறும்புகள் 

Sunday, August 5, 2012

மௌனங்கள் ..


மௌனங்கள் ..
பல நேரங்களில் 
விடை தெரியாத 
கேள்வி குறியானாலும்..
விழிகள் பேசும் ..
மௌன மொழி 
பல நேரங்களில் 
பல வினாக்களுக்கு 
விடை தருகிறது 
காதலில் மட்டும் ..
www.writerprabashkaran.blogspot.com