நிறைய பேசுவோம்

Monday, December 19, 2011

காதலித்து பார்



தியானம் பழகு
மனம் ..
அமைதியாகும்
உள்ளம் அமைதி
பெறும் .. என்றார்
அடுத்து ..
கோபப்படு
இல்லையெனில் ..
நீ .. ஏமாளி
என்றார் ..
காதலித்து பார்
உன் ..
உள்ளம் அமைதியாகும்
கோபமும் வரும் ..
என்றோ ..
ஒரு நாள்
நீ ..
ஏமாளி என்றார்
நான் ..
என்ன செய்ய ..
புரியவில்லை ..
எனக்கு

Friday, December 16, 2011

உன் நினைவை சுவாசித்து வாழ்கிறேன்


சுவாசிக்க ..
காற்றுதான்
தேவை இருந்தும்
ஏனோ..
உன் நினைவை
சுவாசித்து
வாழ்கிறேன்
உன் ..
நினைவுகளை
சேமித்து சேமித்து
நானும் ..
காதல் ..
கடனாளியாகி ..
போனேன் ..
நினைவுகளோடு
வாழும் போதும்
தோற்காமல்
ஜெயித்து ..
கொண்டிருப்பது
என்னமோ ..
காதல்தான் ..

Sunday, December 11, 2011

பல்லாண்டு வாழ்க ரஜினி ..


சின்ன வயதில்
உன் ஸ்டைல்
பார்த்து ..
பரவசமானேன் ..
பைரவி ..
படத்தில்
நீ ...
பிடித்த பாம்புக்கு
நான் ரசிகன்
ஜானி படத்தில்
உன் போன்று
தலை முடி
வைக்க ..
நெற்றியின் ..
ஓரம் வளர்த்த
முடியை ..
வெட்டி..வெட்டி..
தோற்று போனேன்
நான் ..
வளர வளர ..
உன் ஆன்மீகமும்
பிடித்து போனது
உன்னை ரசிக்க
கோடானு கோடி
மக்கள் ..
அதில் .. ஒரு
துளியாய் ..
நானும் ..
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க
ரஜினி .. என்று
உளமார ..
வாழ்த்துகிறேன்

Saturday, December 10, 2011

காதல் ஒரு மாயை ..



அவள் பார்வையில்
அவளிடம் ..
வார்த்தைகளை
தொலைத்தேன் ..
அவள் ..
புன்னகையில்
என்னை தொலைத்தேன்
அவள் ..
பேசிய போது
மனதை தொலைத்தேன்
மொத்தத்தில் ..
வாழ்கையை
தொலைத்த போதுதான்
புரிந்து ..
போனது ..
காதல் ஒரு
மாயை ..
என்று ..

Wednesday, December 7, 2011

எரிச்சல் வங்கி


இன்று மதுரை ஸ்டேட் பேங்க் ஜங்ஷன் அருகில் உள்ள மெயின் பிராஞ்சில் பணம் கட்ட சென்றேன் .டோக்கன் வழுங்கும் இயந்திரம் வேலை செய் யவில்லை ஒவொரு கவுன்டரிலலும்  பெரிய வரிசை .வரிசையில் என் மனைவியை நிறுத்தி விட்டு சில சாமான்கள் வாங்க வெளியே கிளம்பி விட்டேன் அரை மணி நேரம் கழித்து வந்தேன் வரிசையில் பெரிய முன்னேற்றம் இல்லை .வயதானவர்கள் பாவம் உட்கார முடியாமல் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர் டோக்கன் இருந்தால் அவர்கள் உட்கார்ந்து கூப்பிடும் போது கட் டலாம் பாவம் எப்போது அந்த வங்கிக்கு சென்றாலும் பணம் கட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது அவ்வளவு கூட்டம் .டோக்கன் வைத்திருந்தால் கூட்டத்தை பார்த்துவிட்டு வெளியே போய் நம் வேலையை பார்த்து விட்டு வந்து கட்டலாம் இதற்கு ஒரு வழி செய்யகூடதா இவர்கள் .. ,வயதானவர்கள் வரிசையில் நிற்கும்போது பாவமாய் உள்ளது . என்ன சொல்ல நம் நாட்டில் இப்படிதான் போலும்...


Sunday, December 4, 2011

தனுசின்அரிய 3 திரைப்பட புகைப்படங்கள்

தனுசின் அரிய 3 திரைப்பட  புகைப்படங்கள்  





Friday, December 2, 2011

புட்டி பால் வாங்க .. காசு இல்லை


பிள்ளை ..
பிறந்தவுடன்
மார்பில்
அதிகம் ..
பால் சுரக்க
வேண்டுமே ..
என்று ..
கவலை ..
கொண்டாள்.
ஏழை தாய் .
காரணம்
புட்டி பால்
வாங்க ..
காசு இல்லை