நிறைய பேசுவோம்

Saturday, February 19, 2011

மொபைல் போன் விர்.. விர் இரவு 2 மணிக்கு

இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது பல நன்மைகள் ஒத்து கொள்வோம் . ஆனால் மொபைல் போன்களால் ஏற்படும் சில தீமைகளில் ஒன்றாக நடந்த சம்பவம் ஒன்றை இங்கே  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .நண்பரின் பையன் கல்லூரியில் இறுதி வருடம் படித்து வந்தான் .இரவு படுத்து உறங்கும் வேளையில் மொபைல் போன் விர்.. விர்.. என்று இரவு 2 மணிக்கு சத்தம் எழுப்பி இருக்கிறது .அப்போது அவன் அருகில் படித்திருந்த அவன் அம்மா எடுத்து பேசியுள்ளார் எதிர்முனையில் பேசியது இளம் பெண் அவர்களின் மகன் பெயரை சொல்லி கொஞ்சல் பேச்சு சினுங்கல் பேச்சுக்கள் அதிர்ந்து போனார்   அம்மா  காரணம்  தன்  ஒரே  மகன்  காதலிக்கிறான்  
என்ன  செய்வது பதட்டத்துடன்  மகனை எழுப்பி பேசியுள்ளார் . ஆனால் அம்மாவுக்கு தெரிந்து விட்டது என்ற ஆதங்கத்தில் அம்மாவை கண்டபடி திட்டியிருக்கிறான் . மேலும் அம்மாவிடம் சரிவர அன்றிலிருந்து பேசுவதுமில்லை அந்த அம்மா நிலைகுலைந்து போய்விட்டார் .இப்போது அந்த பெண்ணை பற்றி நினைத்து பாருங்கள் அந்த பெண் கவலை படமாட்டார்  ஆனால் அவரின் பெற்றோர்கள் ..? 

இதற்கு யார் காரணம் இன்றும் இரவில் போர்வைக்குள் மொபைல் போனை வைத்துக்கொண்டு காதல் வளர்க்கிறேன் என்ற பெயரில் குட்டி சுவராகி போகிறார்களே இவர்களை நாம் எப்படி திருத்துவது நீங்களும் சிந்தியுங்கள் .

என் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி 

கத்தியின்றி .. ரத்தமின்றி ..

கத்தியின்றி ..
ரத்தமின்றி ..
ஒரு கொலை ..
ஆம் ..
அவள் என் ...
காதலைத்தான்

இப்படியும் காதல்

நேற்று.. 
நாங்கள் இருவரும் 
காதலர்களாக சுற்றினோம் .
இதோ ....
இன்று கையசைத்து  
பிரிகிறோம் நண்பர்களாக ..
நாளை ...
மீண்டும் சந்திப்போம் 
கணவன் மனைவியாக 


தங்கம் ஜொலிக்குது மனசு வலிக்குது


நான் அன்று மதுரையில் பிரபலமாக உள்ள நகைக்கடைக்கு தங்க நகை வாங்க சென்றேன் .சிறியதாக ஒரு தோடு மட்டுமே எடுத்தேன் விலையை கேட்டவுடன் ஆடிப்போய்விட்டேன் காரணம் அன்றைய சந்தை விலையை விட கே.டி.எம் காக பத்து சதம் அதிகம் சரி இது வாடிக்கை என்று சமாதானம் செய்து கொண்டேன் அடுத்து அந்த விற்பனை பிரதிநிதி கூறியதுதான்
சங்கடத்தில் ஆழ்த்தியது சேதாரம் மற்றும் நகை வடிவைமப்புக்காக   பதினெட்டு சதம் விலை உயர்வாம் .

     அப்போது நான் கேட்டேன் அவரிடம் இதை விற்கும்போது மொத்தமாக  28 % நட்டம் அப்படிதானே என்றேன் 

"ஏன்....?" என்று ஆச்சர்யமாக பார்த்தார் 

நான் சொன்னேன் எப்படியும் மாற்றத்தானே செய்வோம் அப்போது நீங்கள் வடிவமைப்பு சேதாரம் எல்லாம் எங்களுக்கு தரமாட்டிர்கள்தானே என்றேன் .
சிரித்தார் 

பாருங்கள் கே.டி.எம் யை விட 18 % விலை அதிகம் மேலும் சென்னையில் விற்பதை விட மதுரையில் அன்றைய சென்னை சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு விற்கின்றனர் .

இதை எல்லாம்  கேட்பவர் யாருமில்லையா  சிந்தியுங்கள் என் மனதில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து  கொண்ட திருப்தியுடன் விடை பெறுகிறேன் 

கவிதை கதைகளோடு இந்த மாதிரியான எண்ணங்களையும்  உங்களோடு பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்



என் இதயத்திலும்தான்

அவள் ...
வாசலில் மட்டும் 
புள்ளிகளை ..
வைக்கவில்லை ..
என் இதயத்திலும்தான்

இதயத்தை திருடிய அவளுக்கு

இ.பி.கோ  பிரிவுகளை ..
ஒரு முறை ..
புரட்டி பாருங்களேன் 
என் இதயத்தை ..
திருடிய அவளுக்கு 
என்ன தண்டனை 
தரலாம் .. என்று

நட்சதிரங்கள்

அன்பே ..
வானம் பார்த்து .
ஏன் ...
சிரித்தாய்
பார் ...
வரிசையாய் நட்சதிரங்கள்