நிறைய பேசுவோம்
Saturday, May 5, 2018
அன்னையர் தினத்தில்
லேபிள்கள்:
அன்னையர் தினத்தில்
விவசாயி
“விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல்வாதி கலந்து கொண்ட வேளையில்
அவரின் மனைவியும் நடிகையும் ஆன அவள் அந்நிய குளிர்பாண பெருமைகளை விளக்கி விளம்பரம்
நடித்தாள்..”
லேபிள்கள்:
விவசாயி
Saturday, September 9, 2017
சிறுகதை :: பணம்
சிறுகதை :: பணம் பிரபாஷ்கரன்
சுகுமார் அந்த ஹோட்டலில் நுழைந்தவுடன் ஆகா.. ரவா
தோசை இங்கு நல்லாருக்கும் சாப்பிடலாம் என்று நினைத்தவன் சர்வரை அழைத்து ஆர்டர்
செய்தான் ..
“சார் வேறு என்ன வேண்டும் கேட்ட சர்வரிடம்
ஸ்டிராங்காக ஒரு காபி ..”-என்றான்
சர்வர் சென்றவுடன் பர்சில் துழாவி ஐந்து ரூபாய்
நாணயத்தை தனியாக எடுத்து வைத்து கொண்டான் டிப்ஸ் கொடுப்பதற்காக, சர்வர் கல்லாவில்
மாற்றி மிச்ச காசை கொண்டு வரும்போது பத்து ரூபாயை கொண்டு வந்து விட்டால் சுகுமார்
எப்போதுமே டிப்ஸ் வைப்பதுக்கு என்றே ஐந்து ரூபாய் நாணயத்தை தனியே வைத்திருப்பான்
..
சர்வர் பில்லை கொடுத்தவுடன் வழக்கம் போல் மிச்ச சில்லரை
எடுத்து கொண்டு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தான் அதை எடுத்த சர்வர் நேரே கல்லா
அருகில் இருந்த உண்டியலில் போடுவதை கவனித்த சுகுமார் மேனேஜரை அழைத்து அதை பற்றி
கேட்டான்
அவர் சிரித்தவாறே இங்கு சர்வர் எல்லோருக்கும்
நல்ல சம்பளம் தருகிறோம் டிப்ஸ் வாங்குவது வழக்கம் இல்லை இருந்தாலும்
வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் தரும் டிப்ஸ்சை இந்த உண்டியலில் போட்டு
விடுவார்கள் .இந்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவோம் என்றார் ..
அதை கேட்டு ஒரு கணம் திகைத்த சுகுமார் சார் நான்
இந்த உண்டியலில் பணம் போடலாம் என்று கேட்டு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்து
போட்டான் ..”
Wednesday, July 19, 2017
குழந்தை
“இரண்டு குழநதைக்கு
அம்மாவாக நடித்து கொண்டிருந்தாள் தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்துடன் நடிகை
..”
Wednesday, June 14, 2017
பத்து நொடி கதை
பத்து நொடி கதை
“மாமியாருடன் சண்டை
போட்ட அவள் எதிர்ப்பை காட்டினாள் .குடும்பம் வாட்ஸ் அப் குருப்பிலிருந்து வெளி
வந்ததன் மூலம் ..”
Thursday, April 27, 2017
இப்படியும் சில மனிதர்கள்
இப்படியும் சில மனிதர்கள்
எனக்கு கார் பார்க்கிங் கிடையாது. பக்கத்து பிளாக்கில் ஒரு மரம் இருக்கும் அதன் அடியில் நிறுத்தினால் அந்த வீட்டம்மா கல்லை பரப்பி வைக்கும் கேட்டால் எனக்கு கிச்சனில் இருந்து ரோட்டை பார்க்க முடியலை மறைக்குது கார் என்றது சர் என்று வைக்கவில்லை. ரொம்ப நாளாக அந்த அம்மா இல்லை மகள் குடும்பம் மட்டுமே இருந்தது சரி நிறுத்தலாம் என்று இரண்டு நாள் நிறுத்தினேன். வெயில் போனவுடன் காரை எடுத்து விடுவேன். இன்று நிறுத்தும் போது அந்த்ம்மாவின் மருமகன் இங்கு நிறுத்த கூடாது என்றார். வெயிலுக்குதான் நிறுத்துறேன் என்ற போதும் கறாராக கூடாது என்றார்.
உங்களுக்கு நல்ல மனசு இருக்கு நல்லா வருவிங்க என்று சொல்லி விட்டு காரை எடுத்து வந்து விட்டேன்..
#நம்மை டென்சன் படுத்த பலரும் காத்திருக்கின்றனர்..
உங்களுக்கு நல்ல மனசு இருக்கு நல்லா வருவிங்க என்று சொல்லி விட்டு காரை எடுத்து வந்து விட்டேன்..
#நம்மை டென்சன் படுத்த பலரும் காத்திருக்கின்றனர்..
லேபிள்கள்:
இப்படியும் சில மனிதர்கள்
Saturday, April 8, 2017
நீயா நானாவில்
நீயா நானாவில் பேசும் இந்த மக்கள் மேல் தட்டு மக்களாக தெரிகிறது..கல்யாணம் நடப்பதன் கஸ்டம் தனிப்பட்ட அவர்களுக்குதான் தெரியும் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியை எடிட் செய்து சாதகமாக காட்டி இதுதான் தமிழ்நாட்டில் என்று சொல்வதை ஏற்க முடியாது. மீடியாவிற்கு அது வியாபாரம். சினிமா பார்ப்பது போல் பார்த்து விட்டு அதை மறந்து விட வேண்டும். அதுதான் நமக்கு நல்லது
Subscribe to:
Posts (Atom)
