Pages

Friday, March 18, 2011

சிறுகதை : யதார்த்தம் -- பிரபாஷ்கரன்

எனது ப்ளாக்யை படித்து வரும் அனைவருக்கும் வணக்கம் . இந்த சிறுகதை நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது அப்போது இதை மூன்று பக்கங்களுக்கு எழுதியிருந்தேன் பல பத்திரிக்கைகளுக்கும் அப்போது அனுப்பி யாரும் போடவில்லை தற்போது அதை சில வரிகளில் சுருக்கி எழுதி நீங்கள் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வெளியிட்டுளேன் நான் எழுதிய முதல் சிறுகதையை  பலவருடங்கள் ஆனாலும் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி .

வானம் லேசாக வெளுத்திருந்தபோது 'குடை ரிப்பேர் ..குடை ரிப்பேர் .' கத் தியவனை கூப்பிட்ட மரகதம் கிழிந்திருந்த குடையை தைக்க கொடுத்தாள்.. வாங்கி பேரம் பேசி அவனும் தைத்து கொடுக்கும் வேளையில் மழை தூறல் விழ ஆரம்பித்தது . தூறல் மேலும் வலுக்க காசை வாங்கி கொண்ட அவன் .
பழைய குடைகளை மடித்து சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு 'குடை ரிப்பேர் ..குடை ரிப்பேர் .' கத்தியபடி வேகமாக நடையை விரைவாக்கினான் .

12 comments:

  1. நல்லா இருக்குங்க..கொஞ்சம் விரிவாகவே எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
  2. ஹைக்கூ போல இருக்கிறது இந்த சிறுகதை..

    ReplyDelete
  3. வீடு கட்டிக்கொடுப்பவனுக்கு, பிளாட்பார்ம் தான் வீடு என்பது போல இருக்கிறது.

    ReplyDelete
  4. நல்ல இருக்கு .உண்மையாவே "சிறிய" கதை .வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. /Blogger டக்கால்டி said...

    நல்லா இருக்குங்க..கொஞ்சம் விரிவாகவே எழுதி இருக்கலாம்./

    தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  6. /Blogger பாரத்... பாரதி... said...

    ஹைக்கூ போல இருக்கிறது இந்த சிறுகதை..

    March 18, 2011 11:59 PM
    Delete
    Blogger பாரத்... பாரதி... said...

    வீடு கட்டிக்கொடுப்பவனுக்கு, பிளாட்பார்ம் தான் வீடு என்பது போல இருக்கிறது./


    தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. /S.Sudharshan said...

    நல்ல இருக்கு .உண்மையாவே "சிறிய" கதை .வாழ்த்துக்கள் :)/

    தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  8. /Blogger Ambika said...

    short, sweeet and sharp/

    தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  9. இயல்பு நடையில் எழுதிய ஒரு குட்டிக் கதை. அருமையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  10. நன்றாகவுள்ளது நண்பா..

    இந்த சிறுகதைப் போட்டியின் அறிவிப்பை அறிவீர்களா..

    http://gunathamizh.blogspot.com/2011/03/blog-post_23.html

    ReplyDelete
  11. மிகவும் அருமை!!! இன்னும் சற்று விவரித்து இருந்திருக்கலாம்!!

    ReplyDelete